states

img

13 பேர் உடல் கருகி பலி

மத்தியப்பிரதேச மாநிலம் குனா பகுதியில் புதனன்று நள்ளிரவு டிப்பர் லாரி மீது பயணிகள் பேருந்து நேருக்கு  நேர் மோதியது. இத னால் இரு வாகனங்  களும் தீப்பிடித்து எரிந்தன. தகவல றிந்த போலீசார் மற்  றும் தீயணைப்பு படை வீரர்கள் சம்  பவ இடத்துக்கு விரைந்து, நீண்ட போராட்டத்துக்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் 13 பேர் உடல் கருகி பரி தாபமாக உயிரிழந்தனர். 17 பேர் படுகாய மடைந்தனர். உயிரிழந்தவர்களை அடை யாளம் காண டிஎன்ஏ பரிசோதனை மேற்  கொள்ள திட்டமிடப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா  ரூ.4 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 உதவியும் வழங்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.